Sunday, September 28, 2014

பெரியாழ்வாரா?




திரு ஜெயமோகனரையா,

அண்மையில்தான் உங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.நீலத்தில் கரைந்தேன். உங்கள் திறனை வியக்கிறேன்.

படித்தனவும் பயின்றனவும், படைப்பனவும். தமிழும், அழகும், மோகனமும்வெல்லும் ஒளிவண்ணம் தரும் வேலும் கொண்டீர்.

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’

நீங்கள் மேற்கோடிட்ட பெரியாழ்வார் வரியை 4000 பிரபந்தத்தில் தேடினேன்.
கிடைக்கவில்லை.

அதனையொட்டி வரும் வரிகளையும் அறிய ஆர்வத்தைத் தூண்டினீர்.
மூலத்துக்கு ஏதாவது சுட்டி கொடுப்பீர்களாயின் மிகவும் மகிழ்வேன்.

நன்றி
டில்லிதுரை

அன்புள்ள டில்லித்துரை,

அது பெரியாழ்வாரின் வரி இல்லை. என் கனவில் பெரியழ்வாரின் வரியாக வந்த என்னுடைய சொந்த வரிதான். கனவில் அப்படி ஒரு மாயமாகத் தெரிந்தது அது

ஜெ