Friday, October 31, 2014

பீமனைப்பற்றி

 
 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் பதிலுக்கு நன்றி. 

இப்போது எனக்கு ஒரு சந்தேகம். அர்ஜுனன் மடைப்பள்ளிக்கு  செல்லும் போது அங்கு இருக்கும் வயது முதிர்ந்த அதன் தலைவரை பற்றி பீமன் பெருமையாகச் சொல்லும் போது " அவர் சூதன் தானே " என அர்ஜுனன் கேட்டவுடன் " உன் மனம் நோய்வாய்பட்டு இருக்கிறது எனக் கூறும் அதே பீமன் " துரோணரின்" குருகுலத்தில் அர்ஜுனனோடு விற்போர் புரியும் கர்ணனை மட்டும் " சூதன் எனச் சொல்லி இழிவு செய்வது எதன் அடிப்படையில்?
 
பரந்த மனப்பான்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபாடும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா இதை.  அன்று சூதரா எனக் கேட்ட அதே அர்ஜுனன் கூட கர்ணன் இருக்கட்டும் எனச் சொல்லியும் பீமன் ஏற்றுக் கொள்ளாதது என்ன வகையான மனப்பாங்கு? 

நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்....

அன்புடன்

பிரசன்னா 

 
 
அன்புள்ள பிரசன்னா
 
நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடவே கடும் வேலைப்பளு. பயணங்கள்
 
இத்தனைக்கும் நடுவே நான் கடிதங்களுக்கு விளக்கமான பதில்களும் எழுதுவது நமக்கு இன்று வாசிப்பில் உள்ள பொதுவான இடர்கள் எனக்குத்தெரியும், உதவுவது என் கடமை என்பதனால்
 
ஆனால் கேள்விகேட்பவர்கள்  குறைந்தபட்சம் அதற்கு முன் நான் அளித்த பதில்களை என் இணையதளத்தில், இந்த தளத்தில், கூகிளில் தேடியபின் கேட்பது என் உழைப்புக்கான கௌரவமாக அமையும்
 
இந்த வினாவிற்கு நான்குமுறை பதில் சொல்லிவிட்டேன்
 
ஜெ