Thursday, October 30, 2014

பகடியின் திரை

[கலம்காரி கம்பள ஓவியம்]



ஜெ சார்

பயங்கரமான போர், உணர்ச்சிகரமான நாடகத்தருணம், இரண்டும் முடிந்தபின் மிக அமைதியான ஒரு உரையாடல்காட்சி  பிரயாகை 11

ஆச்சரியம் என்னவென்றால் இந்த காட்சியும் அதே அளவுக்கு தீவிரமானதாக மனசைக்கவர்கிறது என்பதுதான். பலமுறை இந்த அத்தியாயர்த்தை வாசித்தேன். இதிலுள்ள நுட்பமான பகடி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அந்தப்பகடியை இவர்கள் ஒரு ஆழமான விஷயத்தைச் சொல்ல பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளித்தது

அதாவது பேசவேண்டியது ஆழமான , உணர்ச்சிகரமான விஷயம். அதை ‘பொதுவா வாழ்க்கைன்னா’ என்று பேச ஆரம்பித்தால் செயற்கையாக ஆகிவிடும். ஆகவே அதை ஜாலியாக வேண்டுமென்றே பேசுவதுபோல ஆக்கிக்கொள்கிறார்கள். பீமன் வாரிக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் பேசுவது ஆழமான உணர்ச்சிகரம்

அந்த நாடகம் மிக அழகாக வந்திருக்கிறது. வாளால் வெட்டிவிட்டு அதே வேகத்துடன் குண்டூசியாலும் குத்துவதுபோல மென்மையான அத்தியயாம். ஆனால் ஆழமான அத்தியாயம்

மூன்றுபேருடைய மனசும் அற்புதமாக வந்துவிட்டது.

சாரங்கன்