Sunday, November 30, 2014

மாயக்கறுப்பன்




"ஆனதை செய்வோம்" எனும் போது மூடியிருந்த வாய், யானை கண்ட குழந்தை என நேற்று திறந்து விட்டது - அவன் சொல் கொண்டு உருக்கிய வித்தையை கண்டு. இன்று அந்த வாய் திகைத்து மிரண்டு  மூடி கொண்டது. இது மட்டுமே சாத்தியமாகி இருக்க கூடும் வாழ்ந்தாக வேண்டியே உச்ச வெம்மை தரும் வெடிப்பு. தழல் என பொங்கும் வெறியை சுடர் என காத்து எடுத்து செல்லும் கூர்மை. 

எப்போதும் ஒரு புதிய போர் முறை அல்லது ஒரு கருவியின் கண்டுபிடிப்பு அல்லது strategy தான் வெற்றிகளின் திசைகளை திருப்பி வைத்து காலத்தை கணக்கிடும் மனித புத்தியை திகைக்க வைக்கும் போல. எல்லாம் முதல் வேகத்தில் நடந்து விட வேண்டும். ஒரு அடியில் திருப்பி விட வேண்டும் என்கிற அவனின் வேகம் இன்றைய பகுதியில் தெறித்து வந்தது. ஒவ்வொரு ஆளாக அவனின் முடிவு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை கச்சிதமாக முடித்தீர்கள். அவனுக்கு இந்த மூவர் ஒரு பொருட்டாகவே இருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஆனால் குருவி வலி புரிந்து கொண்ட மனம் தருமனுக்கு அர்ஜுனனின் உயிர் குறித்து தந்த வாக்கில் நெகிழ்ந்து மிளிர்ந்தது. 

நேற்று, தன் கூட பிறந்தவனின் மகன் என்கிற வாஞ்சையை குந்தியிடம் நிரப்பி காண்பித்த அதே சமயம்,  இந்த வெற்றி தரும் வண்ணங்களில்  தோய வைத்தும் அவள் அமிழ்ந்து போகுமாறு காட்டினீர்கள். அவளுக்கு அவசியம் கூட இந்த "தன்னிறுவதல் ". எவ்வளவு யோசித்து அமர்ந்தவள் இவனின் சொல்லில் இருந்த பாச தேனுக்கு மட்டும் விழுந்து இருக்க மாட்டாள் என தோன்றுகிறது. 

குந்தி அறையை விட்டு வெளியே வந்து மலர்ந்து உட்காரும் போதே பாண்டவர்கள் எனும் குதிரை மேல் அவன் அமர்ந்து விட்டான் bucephalus க்கு கிடைத்த அலெக்சாண்டர் என. குதிரைக்கு கிடைத்த வீரன். வீரனுக்கு கிடைத்த குதிரை. தேரை ஓட்டினாலும் ஆளை ஓட்டினாலும் இனி மேல் ஓட்ட போகும் சாரதி அவன் என தெளிவாகிவிட்டது. இந்த logical பார்வை தாண்டி யோசித்தால், கண்டிப்பாக உள் இருக்கும் ஒரு தன்மை தான் பிணைத்து இருக்கும். அந்த மகரந்தம் தந்த அண்மை தான் குந்தி, தர்மன், பீமன் என எல்லோரில்லும் பரவியது என்று யோசித்து கொள்கிறேன்.  தந்தையிடம் கிடைக்காத ஒரு பாதுகாப்பு உணர்வை இவன் தந்து இருப்பான். கூடவே அதே தந்தை காட்டிய விளையாடல் உலகையும் இவர்களுக்கு காண்பித்து களித்தபடி செல்லும் ஒரு mentor போலவும் இருந்து இருப்பான். அனைவரையும் ஒரு உயர்ந்த இடத்தில வைத்து விட்டு, இயற்கை விதி என அனைவரும் சாயும் போது சோர்ந்து போகும் அலைபாயும் மனம் கொண்ட அர்ஜுனன் இடைவிடாமல் இலக்கு தேடும் அஸ்திர வில் போன்று சற்று கழித்து தான் இவனிடம் சென்று சேர்வான்.சேர்ந்து பிரிந்தும் சேர்வான் எனவும் தோன்றியது. மிக துல்லியமாக personal மற்றும் professional balance செய்தபடி செல்லும் leader முகத்தை இன்று கண்டேன்.

இதுவும் ஒரு நடை தான் உங்களக்கு. அலமலந்து சொல்லி மாளாது கூடும் வானவில் போன்று மெதுவாக சித்திரம் அமைத்து வர்ணிப்பது ஒரு வகை போல [ திரௌபதி ]. கல் சிலை ஆகும் வரை ஒரு கண் கட்டு மயக்கம் என செல்வது வேறு நடை [ கிருஷ்ணன் ]. நாளை என்ன செய்வானோ.... இந்த சூது எனும் கருப்பு நிறைந்த காந்தாரி சாபம் வரை யாதவ குலத்தை இழுத்து செல்லும் மந்திர மாயன். 

லிங்கராஜ்