Friday, February 13, 2015

காமத்தின் மர்மங்கள்



அன்புள்ள ஜெ
வெண்முகில்நகரம் தொடங்கிய நாள்முதல் காமம் பெருக்கெடுத்துச்செல்கிறது
.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணம். ஒவ்வொரு அர்த்தம். ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை விஷயங்கள் நம்முடைய மரபிலேயே இருக்கிறதா? ஈடிப்பஸ் காம்பிளெக்ஸை வாசித்ததே பெரிய ஷாக் என்றால் அந்த ஆள்மாறாட்டம் இன்னொரு அற்புதமான கதை. நிறைய உரவுகளில் இந்த ஆள்மாறாட்டம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கேட்டுப்பாருங்கள் பல உண்மைக் கதைகளில் இப்படிச் சொல்வார்கள் . காதலர்களின் தோழியோ தோழனோ காதலர்களாக ஆகிவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் இவர்களின் ஆல்டர் ஈகோ தானே? இந்தக்கதைகளுக்குள் உள்ள ஆழத்தை நினைத்துப்பிரமித்துப்போயிருக்கிறேன்.ஜெயராமன்