Thursday, February 19, 2015

இடையே நீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முகில் நகரத்தில் திரௌபதியோடு கிட்டத்தட்ட கூடவே இருந்தாலும், மனம் சற்றே பின்னோக்கி சென்றது, நீலத்தின் முடிவை நோக்கி.

"கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்"

கிருஷ்ண மாமன்னர் கண்ணனாக மீண்டுமாகும் தருணம். என்ன வரிகள்! ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் முடிவுக்காட்சியை காண்பது போல் இருந்தது.

நன்றிகள் பல. ஞான பீடம் காத்திருக்கிறது, அதற்குரியவரை அடைய, தாங்கள் விரும்ப விட்டாலும். அப்படியாவது அது தன்னை நிரூபித்து கொள்ளட்டுமே.

அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.