Friday, February 20, 2015

ஸ்ரீ



ஜெ

19 ஆம் அத்தியயத்தை இன்றுதான் நான்காம் முறையாக வாசித்து முடித்தேன். ஐந்து ஐந்தாகவே செல்லும் உக்கிரமான ஜபம். ஐந்துகால பூசை. ஐந்து பூசைமுறைகள். பஞ்ச மகாரம். ஐந்து உணர்ச்சிகள். ஐந்து அழிவுகள்\

பாஞாலியை ஐந்து கணவர்கள் அடைந்த அத்தியாயங்களை முழுக்க வேறுஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது இது. இதுவரை மெட்டீரியலிஸ்டிக் ஆக யதார்த்தமாக இருந்த காமம் ஒரு பெரிய சக்தி தரிசனமாக பிரபஞ்சக்களியாட்டமாக ஆகிவிட்டது

இப்போது வாசிக்கும்போது தருமன் முதலான ஐந்து பேரின் காமமும் ஐந்து வகை யோகங்களாக புதிய புதிய அர்த்தங்கள் அளிக்கின்றன. கல்வி ஒரு யோகம். வித்யா யோகம் அது.அடுத்தது ஹடயோகம். அடுத்தது உபாசனா யோகம். அடுத்தது விபாசனை. அடுத்தது  சரணாகதி.

எங்கள் முறை சாக்த யோகத்துக்கு நெருக்கமானது. ஸ்ரீயோகம். அதைப்பற்றி ஒருநாள் உங்களிடம் பேசலாமென நினைக்கிறேன்

பிரபாகர்