Saturday, March 14, 2015

கிருஷ்ணன் மீண்டும்



ஜெ,

கேசவமணியின் நீலம் பதிவை வாசித்தபின்னர் மீண்டும் நீலத்தை வாசித்தேன். அது இருக்கும் ஒரு உச்சத்தை கற்பனைசெய்யவே முடியவில்லை. செய்யுளா பாடலா என்று தெரியாத அற்புதமான மொழி. அர்த்தமெல்லாம் தேவையில்லை சந்தம் மட்டுமே போதும் என்று வாசித்து வாசித்து கண்ணீர்மல்கிக்கொண்டிருந்தேன். அந்த உச்சம் நீங்கள் மட்டும் எழுதியதில்லை. கண்ணனும் சேர்ந்து உருவாக்கியது. கண்ணனின் உதடுகளைப்பற்றிய வரிகளை வாசித்து மீண்டும் கண்கலங்கினேன். அழகு என்று ஒன்று மட்டுமே போதும் கடவுளை அறிவதற்கு. மிச்சமெல்லாம் அதிலே அடக்கம் என்று நினைத்துக்கொண்டேன்

சுவாமி