Saturday, March 28, 2015

சூதர் குரல்


ஜெ,

சூதர் பாடல்கள் கொடுக்கும் மேலதிக அர்த்தம் வழியாகவே மகாபாரதத்தின் வீச்சு வெளிப்படுகிறது. சூதர்களின் திமிர்தான் முக்கியமான விஷயம். பெருநகரத்தை அமைத்துவிட்டு ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். ஒருத்தி அமைக்கப்போகிறாள். பொன்னகரம் என்பது எப்போதுமே கருணையே இல்லாதது, அழுகி நாறுவது என்று சூதன் வந்து பாடுகிறான் என்றால் அவனுடைய அந்த அறிவின் திமிர்தான் முக்கியமானது. அவனுடைய குரல் அறிஞனின் குரல். அல்லது கவிஞனின் குரல்

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அந்தக்குரலாக ஒலிப்பது வியாசர்தான் என்றுதான். வியாசர் சொல்லவேண்டியதைத்தான் சூதர் வந்து சொல்கிறார். அதேபோல நீங்களும் ஒரு நவீனச் சூதர். நீங்கள் உங்கள் குரலாகவும் சூதனைத்தால் பாடவிடுகிறீர்கள்.

சூதன் இரண்டு ஆட்சியாளருக்கும் விடுக்கும் எச்சரிக்கை அபாரமானது. ஒரு துளி கருணை, ஒரு துளி மண் இல்லை என்றால் பொன்னுக்கு ஒரு பயனும் இல்லை என்கிறான். இலங்கை என்பது ஆணவத்தின் அடையாளம். அது ஒருநாளும் வாழ்ந்ததில்லை என்கிறான்

ஜெயராமன்