Wednesday, April 29, 2015

அரங்கமுற்றம்



ஜெ,

தருமனும் பாண்டவர்களும் அந்த முற்றத்திலே காத்திருக்கும் காட்சி அழகாக இருந்தது. அதில் பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனால் இயல்பான காட்சி அது. அதிலே உள்ள தயக்கம். realism எல்லாம் நேர்த்தியானவை. கிருஷ்ணன் வராமல் போகமுடியாது என்று தருமன் நினைப்பது. மந்திரி என்ன ஆகிறது என்று கேட்பது. பூரிசிரவஸ் தவிப்பது எல்லாமே அழகாக வந்திருந்தன

அதோடு கிருஷ்ணன் தேரை அவனே ஓட்டிவருவதும் சவுக்கை அந்த குசும்பு வீரன் கையிலே கொடுப்பதும் நைசாக பாண்டவர்களை துரியோதனன் பக்கம் ஓட்டிச்செல்வதும் நுணுக்கமான சித்திரிபாக இருந்தன

இந்த முற்றம் வெண்முரசிலே எத்தனை தடவை வந்துவிட்டது. இங்கே பீஷ்மர் தேரிலே வந்து இறங்கினார். பாண்டு கிளம்பிப்போனார். எப்படிப்பட்ட சித்திரிப்புகள் இருந்தன ./ அதெல்லாம் திரும்பத்திரும்ப ஞாபகத்துக்கு வருகின்றன. அதையெல்லாம் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை சும்மா முற்றம் என்ரு சொல்லும்போதே ஒட்டுமொத்த ஞாபகமும் வந்துவிடுகிறது

அந்தமுற்றமே ஒரு குருஷேத்ரம் போல இருகிறது என்று நினைத்தேன். அங்கேதான் எல்லாமே நடக்கிறது. ஒருநாடக அரங்கம்மாதிரி இருக்கிறது. அங்கே நடப்பவற்றை மட்டும் வைத்தே வெண்முரசை சுருக்கமாக நாடகமாக எழுதிவிடலாம்

ரவீந்திரன் எம்