Monday, July 13, 2015

காலடியோசை

ஆசிரியருக்கு ,

சியாயாமந்தகத்தின் நீரோட்டம் பல்வேறு பொருள் படுகிறதென்றால், திருஷ்ட்டத்தியும்ணனின் பாதக் குறடொலியும் அது போன்றதே. 

முதலில்  பாமையை சந்திக்கச் செல்லும் போது ஒரு வியப்பு கலந்த மரியாதையும், இப்போது கலத்தில் கிருஷ்ணனை சந்திக்கும் போது ஒருவித கடந்த நிலையும் காலடியில் எதிரொலிக்கிறது.

அனைத்தையும் அடக்கிக் கொண்டு நெகிழாத இரும்புக் காலடி திருஷ்ட்டத்தியும்ணனுடையது. இது இந்த யுகத்திற்கு உரியது.

கிருஷ்ணன்.