Sunday, July 26, 2015

பழிமூலம்

ஆசிரியருக்கு ,

மகா பாரதத்தில் சபையில் சிசுபாலனை கிருஷ்ணன் கொன்றது, ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதற்கு நிகர். அடிப்படையில் தந்திரங்களற்ற ராமன் வாலியைக் கொன்றது ஒரு பிறழ்வு.

அடிப்படையில் தந்திரசாலியான கிருஷ்ணன் சிசுபாலனைக் கொன்றது ஒரு நீதிப் பிறழ்வல்ல என்கிறது வெண் முரசு.  அதற்கான முஸ்தீப்புகள் சிசுபாலன் பாமையை நாடுவது முதல் இன்று ருக்மணி வரை எழுப்பப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாரமான புனைவு யுக்தி.

தன்னுள் இருக்கும் பெண்ணும் , பெண்ணுள் இருக்கும் ஆணும் தன்னைத் தான் கண்டு பூப்பது  ஒரு  இலக்கிய தியான  அனுபவம்.  

கிருஷ்ணன்.