Wednesday, July 8, 2015

ஆடல்

ஆசிரியருக்கு ,

ஒரு குழந்தைக் கதையும் ,ஜாலக் கதையும், துப்பறியும் கதையும், நாட்டார் கதையும் சேர்ந்த ஒரு  தத்துவ செவ்வியல் கதை இந்த இந்திர நீலம்.   

போர் முனையில் நிற்கும் போது அது அமரமுனையாக இருப்பதும், சாத்யகியின் பொறுமை இன்மையும் காம்பில்ய முற்றுகையில் துரியன் -கர்ணன் நிகழ்வை நினைவுறுத்துகிறது . காத்திருக்கையில் எண்ணங்கள் கேள்விகள் ஆவதும் அது பெருகுவதும், தோற்றாலும் களம் கண்டு புண் கொண்ட திருஷ்ட்டத்தியும்னின் அனுபவ அறிவும், அபாரம்.

காலையை , மழையை, கடலை , துறையில் படகு அணைவதை விதம் விதமாக வெண் முரசு தோறும் விவரிக்கப் பட்டுள்ளது, இத்தோடு கூட இந்த களம் காண்பதற்கு முந்தய முள்முனை கணங்கள்.

சியமந்தகத்தின் ஆடல் ஈசனின் ஆடலுக்கு இணையானது, இணையற்றது. 

கிருஷ்ணன்.