Saturday, July 18, 2015

வானிலொரு தோட்டம்



ஆசிருயருக்கு ,

அணிசெய்வதும், காயம் பட்டுக் கிடப்பதும் வெண் முரசில் ஒரு தொடர் நிகழ்வென்றால், இந்த கட்டுமானங்களும் அதே போன்றதே. இன்று ருக்மணியின் மாளிகை தொங்கும் தோட்டத்தை நினைவூட்டியது.

அங்கேயே ஒரு நீரோடை , வாசனைகள் , கமுகு உள்ளிட்ட மரங்கள் , மலைகள் என அது ஒரு சொர்க்கம். மனதிற்குள்ளேயே அங்கு சென்று வந்தேன். சிலசமயங்களில் இயற்கையை ஒரு பராமரிக்கப் பட்ட பூங்கா நிகர் செய்துவிடும். 

கிருஷ்ணன்