Tuesday, August 4, 2015

நற்காட்சி:


இன்றைய (இந்திரநீலம் 63) அத்தியாயத்தில் அமிதை தான் விண்ணேறும் முன் இறுதியாகக் கண்ட காட்சி தன் இளையோள் அவள் மனமமர்ந்த மாயனால் கைப்பிடிக்கப்பட்டு, வாழ்நாள் துணையென்ற உறுதியளிக்கப்பட்ட நற்காட்சி.
உண்மையில் கிருஷ்ணனின் படையாழி தன்னை நோக்கி வருவதைக் காணும் ஒருவன் தன் மரணத்தை நேரில் காண்கிறான். மரணம் அணுகுகையில் ஒரு கணம் பல்லாயிரமாகப் பெருகி, அவன் மொத்த வாழ்வையுமே கண் முன் நிகழ்த்திவிடும். அக்கணத்தின் இறுதியில் அவன் நிறைவாக உணரும் ஏதேனும் ஒரு காட்சி வரும். அத்தகைய ஒரு நற்காட்சியை அளிப்பதால் தானோ அப்படையாழிக்கு சுதர்சனம், நற்காட்சி என்று பெயர்!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்