Sunday, November 29, 2015

கொலைவில்



ஜெ

இத்தனை கதைகளுக்குப்பின்னால் காண்டீபம் இப்படி வரும் என நினைக்கவேயில்லை. மிகச்சாதாரணமாக வருகிறது. ஆனால் அந்த காட்சி பிரமிக்கவும் வைக்கிறது. அது கோயிலில் இருக்கிறது என்பதுதான் காரணம். அது என்ன செய்யப்போகிறது என நமக்குத்தெரியும். ஆகவே அது ஒரு கொலைத்தெய்வம் என்பது அதிர்வை அளிக்கிறது. அது கொல்லப்போகும் மனிதர்கள் கண்ணில் விரிகிறார்கள்.

அதோடு இதுவரையிலான நாவலின் உச்சியில் அது வருகிறது. நாவல் நேமியின் வருகையுடன் ஒரு ஆழமான அமைதியை அடைகிறது. அகிம்சை நோக்கி போய்விடுகிறது. ஆனால் காண்டீபம் அதன் உச்சியில் வந்து அமர்ந்திருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது எல்லாவற்றையும் அதுவே  தீர்மானிக்கும் என்று சொல்வதுபோல உட்காந்திருக்கிறது

அதற்கு பூசையிடுவதெல்லாம் ஒரு மாதிரி கலங்க வைத்த காட்சியாக இருந்தது.

அகிலா