Monday, February 22, 2016

மூழ்கியகதை





ஜெ

திடீரென்று நாகங்கள் இப்படி பெரிய கதையாக எழுந்துவருவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தேன். நாகங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இப்போதுதான் முழுமையான குலமுறையெல்லாம் வருகிறது

அப்போதுதான் ஒன்று தோன்றியது அசல் மகாபாரதத்திலேயே உலகம் தோன்றியதைப்பற்றிய் ஆதிப்புராணம் நாகர்களிடமிருந்து பெறப்பட்டது. நாகர்களின் பெரும் புராணக்கதை ஒன்று இங்கே இருந்திருக்கிறது. அதுதான் புரோட்டோ டெக்ஸ்ட். அதிலிருந்துதான் இந்தக்கதைகள் ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நாகர்கள் இந்தக்கதைக்குள் உள்ளடங்கிய ஒரு சப்டெக்ஸ்ட் என தோன்றியது

செல்வா