Wednesday, March 23, 2016

பூரிசிரவஸின் பயணங்கள்



ஜெ

வெண்முரசின் பழைய நாவல்கள் மிகமிகப்பின்னால் எங்கோ சென்றுவிட்டன. நான் எனக்குப்பிடித்த பழைய சில பகுதிகளை வாசிப்பதுண்டு. ஆகவே இம்முறை பூரிசிரவஸின் பயணங்களைப்பற்றி வாசித்தேன்

அவனை ஒரு பகடைக்காய் என்று நினைத்தேன். அவன் பெண்கள் என்னும் களத்திலே ஓடியாடுகிறான். அவனால் முடிவெடுக்கமுடியவில்லை. அந்தந்தக் களத்தில் யாரோ அவனை தூக்கித்தூக்கி வைக்கிறார்கள் என்று தோன்றியது

அவனுடைய அந்தக் காதல் நிறைந்த இளமையான மனம் மிகமிக அழகானது. வெண்முரசின் மிகவும் இனிமையான கதாபாத்திரம் அவன்

ராஜ்மோகன்