Thursday, March 31, 2016

காளியின் களம்



ஜெயமோகன் அவர்களுக்கு,

பன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரிதலைப்பற்றிய கதை. அதை காளியிலிருந்து தொடங்கியிருப்பதை க்கண்டு மகிழ்கிறேன். நீங்கள் உங்கள் நாவல்களை எத்தனை நுணுக்கமாக அமைக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது

மகிஷாசுரனும் ரக்தபீஜனும் பிறக்கிறார்கள். ஆனால் அந்த அசுரர்களை எல்லாம் உளவியல் சார்ந்து காட்டுகிறீர்கள். அதுதான் புதுமை. ரம்பகரம்பர்களின் மனநிலை ஸ்கிஸோபிர்னியாவாக உள்ளது

ஜெயராமன்