Saturday, April 23, 2016

இரட்டை



அன்புள்ள ஜெ

பன்னிருபடைக்களம் ஒரே ஒரு வைரமுனையை திருப்பித்திருப்பி ஆயிரம் பக்கங்களைக் காட்டுவதுபோல விரிந்துவிரிந்து செல்கிறது. இரட்டைத்தன்மை, இரண்டாக இருத்தல் என்பதே பொதுவாக வருகிறது. அதற்குள் எத்தனை வகைபேதங்கள்

இன்று ஜராசந்தனின் குணத்திலுள்ள இரட்டைத்தன்மை அற்புதமாக வந்திருந்தது.ஒருபக்கம் அறிஞன். இன்பதுன்பங்களின் சுவை அறிந்தவன். மறுபக்கம் குரூரமான கொலைகாரன். ஒருபக்கம் அரசன். மறுபக்கம் தத்துவ ஞானி

அவனுடைய அந்த இரட்டைத்தன்மை ஒரே உடலில் என்றால் கர்ணனும் துரியோதனனும் இரட்டையர் ஆகிவிட்டனர். கர்ணனின் கனவில் தேவி வந்து இரட்டையராக ஆகி வந்தால்தான் கவசங்களைக் கழற்றமுடியும் என்கிறாள்

சுவாமி