Monday, August 15, 2016

ஓநாய் தெய்வம்



ஜெ

இன்றுவந்த கதைகள் மூன்று மூன்றுமே ஒன்றுக்கொன்று பதிலகா அமைபவை. கோபாயனரின் கேள்விக்கு அர்ஜுனன் பதில் சொல்கிறான். ஆனால் கோபாயனர் கேட்கும் ஒரு பெரிய கேள்வி நின்றுகொண்டிருக்கிறது

அது ரிஜிஸ்வானின் கதை. அது வேதத்தில் வரும்கதை. அன்னை ஓநாய்க்கு பலிகொடுப்பவன். அது பழமையான கதை என்று தெரிகிறது. எந்த அர்த்ததில் அது அங்கே உள்ளதென்ரு தெரியவில்லை. ஆனால் இங்கே அர்த்தம் தெளிவு

அன்னை ஓநாயின் பசிக்கு ஆயிரம் லட்சம் பலி கொடுப்பது தவிர்க்கவேமுடியாத விஷயம். அதைக்கேட்டபின்பு தருமனால் ஒன்றும் சொல்லமுடியாமலாகிவிட்டது

ஜெயராமன்