Monday, August 29, 2016

சமன்வயம்


சாந்திபனி குருகுலத்தில் அவர்களின் பணி என்ன என்று அதன் முனிவர் சொல்லும் இடம் சுருக்கமாகவும் கூர்மையாகவும் உள்ளது.

நால்வேதம் அமைத்த வேதவியாசர் செய்தது சப்த சமன்வயம். இனி ஒரு தத்துவ சமன்வயம் நிகழ்ந்தாகவேண்டும். இந்த ஆறு ஓடிஓடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. அணைகட்டி நீரை மேலெடுத்து கழனி நிறைத்தாகவேண்டும்

அவர் சொல்லும் விடுகதையும் அழகானது. காளையின் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்புக்குப் பறக்கும் குருவி. உவமைகள் விடுகதைகள் வழியாகத் தத்துவம் வரும்போது அதன் வீச்சு பலமடங்கு கூடிவிடுகிறது

சூதன் நக்கலாகச் சொன்னதைத்தான் சாந்திபனி ரிஷி வேறுவகையில் கவித்துவமாகச் சொல்கிறார் என்பதுதான் பெரியவேடிக்கை என நினைக்கிறேன்

ஜெயராமன்