Saturday, August 27, 2016

பாஞ்சஜன்யம்

 
 
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
நானும் எப்படியாவது வியாசரின் மஹாபாரத புராணத்தின் "பொறியில்" ஏதாவது ஒரு இடத்தில் வசமாக சிக்கி கொள்வீர்கள் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.இந்த முறையும் எளிதாகவும்,அனாயாசமாகவும் தப்பி விட்டீர்கள்!-சாந்தீபனி முனிவரின் பிள்ளையை இளைய யாதவன் (எங்களை  பொறுத்தவரை பகவான் கிருஷ்ணர் தான் அவர்) மீட்ட சம்பவத்தை சொல்கிறேன்.இத்தோடு "பாஞ்சஜன்யம்" கைக்கு கிடைத்ததையும் சுவையாக சொல்லிவிட்டீர்கள்!.- போன முறை காத்திருந்து ஏமாந்தது - திரௌபதியின் துகில் உரிதல் நிகழ்வின் போது!-.
அன்புடன்,
அ .சேஷகிரி.