Sunday, August 21, 2016

யாக்ஞவல்கியரின் நிலை



ஜெ

யாக்ஞவல்கியரின் நிலை பற்றி வரும்  மேற்பரப்பு மட்டும் உருகிய அரக்குக்கட்டி போன்றிருந்தார், பின்னர் அதுவும் உறைந்து நிலைமீண்டது என்னும் உவமை அழகானது. அவர் மணம்புரிந்து மக்களைப்பெற்றாலும்கூட குடும்பத்தை உள்ளூர உணாவே இல்லை. பிறிதொன்றையே தெடிக்கொண்டிருந்தார். ஆகவே உள்ளூர அவருக்கு அவர்கள் ஒருபொருட்டே அல்ல

ஆகவேதான் அவர் பெண்களை தன் அவையில் அமர்த்தி வேதம் கற்பிக்கவில்லை. மைத்ரேயியின் தேடலை பொருட்படுத்தவில்லை. இது ஆண்களின் மனதிலிருக்கும் ஒரு பெரிய மாயை. இதை முனிவர்களுக்கும் கடப்பது கஷ்டம்

ஆனால் மைத்ரேயி கேட்டதுமே அவரால் அதை அவர் எளிதாகக் கடந்துவிடுகிறார். அதனால்தான் அவர் மகாவைதிகராக நிற்கிறார்



சாரதா