Wednesday, August 31, 2016

கீதைவயல்



ஜெமோ

சொல்வளர்காட்டின் சிறப்பு என்னவென்றால் இந்நாவல் நிகழும் காலகட்டத்தில் உபநிடதங்கள் எழுதப்படவில்லை. கீதையும் எழுதப்படவில்லை. அவை உருவாகிவந்த காலகட்டத்தின் ஒரு சித்திரத்தை இந்நாவல் உருவாக்கிக்காட்டுகிறது. அந்நூல்களில் பின்னர் பேசப்பட்டவை இதில் கருத்துக்களாக விவாதிக்கப்படுகின்றன. இப்படி பின்னால் சென்று விரிவாக்கும் கற்பனை மிக முக்கியமான ஒன்று.

இன்றைய அத்தியாயத்தில்  கீதையிலிருந்து இரண்டு வரி வருகிறது. அவை இரண்டுமே வெவ்வேறு உவமைகள். ஒன்று வானத்தில் வேர்விட்டு மண்ணில் கிளைவிட்ட மரம். இரண்டு பெருவெள்ளம் வரும்போது கிணறுகளால் என்ன பயன். இந்த அத்தியாயம் நுட்பமாக இரண்டையும் இணைத்துவிடுகிறது

பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன்? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும்?

முதல்வரி கீதை. இரண்டாவது வரி இன்னொரு உவமையில் இருந்து வந்தது. இது அளிக்கும் அர்த்தங்கள் அபாரமானவையாக உள்ளன.

ஊற்றென்பதும் உள்ளுறைந்த பெருவெள்ளமே. அதை அறிந்தவன் வெள்ளத்தைக் கண்டு அஞ்சுவதில்லை

என்று அந்த வரி விரிந்தபடியே செல்கிறது.  ஒரு கவிதை போல வாசித்துமுடிக்கவேண்டிய இடம் இது.பலவகையிலும் பேசிப்பேசி வளர்க்கவெண்டியது

ஜெயராமன்