Saturday, September 3, 2016

ஈகோ






அன்புள்ள ஜெ

இன்று யாதவர்களின் சண்டையை கவனித்தபோது தெரிந்த விஷயம் இது. அவர்களை உண்மையில் சீண்டுவது அகங்காரம்தான். ஈகோ விஷயத்தில் மட்டும் ஒன்றுமே செய்யமுடியாது என்று தெரிவதுதான் நிர்வாகத்தில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் விஷயம். எப்படிச் சமாதானம் செய்தாலும் ஈகோ புண்பட்டபடியேதான் போகும். மேலும் பொங்கிக்கொண்டேதான் போகும். கெஞ்சினால் அதை கண்டு மிஞ்சுவார்கள். மிரட்டினால் கோபம் கொண்டு எழுவார்கள். சவாலாக எடுத்துக்கொள்வார்கள். ரீசனபிளாகப்பேசினால் காலில் விழுகிறான் என்று எண்ணிக்கொள்வார்கள். அவர்களே அவர்களின் ஈகோவின் உச்சத்தைக் கண்டடைவதுவரை யாரும் ஏதும் செய்யமுடியாது

முருகேஷ்