Monday, December 5, 2016

சிவநாவல்






ஜெ

நான் இப்போதுதான் கிராதத்தை வந்துசேர்ந்திருக்கிறேன். இது ஒரு சைவநாவல். ஆரம்பத்திலேயே உடுக்கோசை வந்துவிடுகிறது. சுடலைப்பொடிபூசி ஆடும் ருத்ரர்கள் வந்துவிடுகிறார்கள். இதுவரை நாம் அறிந்ததெல்லாமே வைணவம்தான். நடுவே இப்படி ஒரு சைவநாவல் என்பது நிறைவை அளிக்கிறது.

இந்தநாவலில் கிருஷ்ணன் இருண்டு கிரகணம் கொள்வதும் சிவன் எழுந்து வருவதற்ககாத்தான் என நினைக்கிறேன். சிவம் ஆடும் தாண்டவமாக இந்த நாவல் அடைவதற்கு வாழ்த்துக்கள்

ஞானசம்பந்தம்