Friday, December 9, 2016

இந்திரனின் பிறப்பு






ஜெ

இந்திரனின் படிப்படியான சித்திரம் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அவன் எப்படி தேவர்களுக்கு அரசனாக ஆனான் என்பது மிகப்பெரிய ஒரு தரிசனம்போல வளர்கிறது. இந்திரனிலிருந்துதான் வெண்முரசே தொடங்கியிருக்கவேண்டும் இல்லையா? முதற்கனலுக்கு முன்னாடியே இந்த அத்தியாயங்கள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

 விருத்திரன் – வருணன் என்னும் முரண் பாடுதான் உண்மையில் நம் புராணங்களிலுள்ள முக்கியமான தொல்கதை. அதன்பிறகுதான் கத்ரு வினதை என்னும் முரண்பாடு. இந்தக்கதையிலிருந்து விரிவாகச் செல்லமுடியும் என நினைக்கிறேன். இதைப்பற்றி சின்மயானந்தாஜி சொல்லியிருக்கிறார்.

ராமச்சந்திரன்