Saturday, January 14, 2017

பிட்சாடனர்






ஜெ

வெண்முரசு கிராதம் முடிந்துவிட்டதுமே நான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தது பிட்சாடனர் ரிஷிகளிடம் வரும் காட்சியைத்தான். எங்கள்ஊரில் கோயிலில் அந்தச்சிலை இருக்கிறது. அதற்கு சுந்தரேஸ்வரர் சிலை என்று பெயர். சிவன் அழகனாக வந்தான் என்றுதான் வாசித்திருக்கிறேன். காட்டளனாக வந்தான் என்பது இப்போதுதான் தெரிகிறது

அப்படிப்பார்த்தால் ரிஷிபத்னிகள் அவரிடம் மயங்கியது ஞானத்தைக் கண்டுதானே? அது காமத்தைவிட உயர்வான ஒரு ஞானத்தவிப்புதானே என்ற எண்ணம் வந்தது

அருணா