Wednesday, January 11, 2017

அரணிக்கட்டை



ஜெ

சாதாரணமாக வந்த வரி இது, வெண்முரசின் கிராதத்தின் கடைசி அத்தியாயம்

உக்ரன்”ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா?” என்றான்

இந்தவரி என்னை புன்னகைக்க வைத்தது. கனவிலே வந்து தன்னை அழைக்கும் மகாகுருநாதரிடம் மகாசூதனாகிய குழந்தை கேட்கிறான். குழந்தை கேட்கும் கேள்வி. ஆனால் ஆசிரியனிடம் மாணவன் கேட்கும் கேள்விகூட

வெண்முரசுநாவல்கள் எல்லாமே நீளம். ஆனால் வாசித்துமுடிக்கையில் அடடா முடிந்துவிட்டதே என்றும் தோன்றுகிறது.

மகேஷ்