Thursday, February 9, 2017

ஐம்பொருட்சாறு



தருமனுக்கான தேறலை  தருமனுக்கு கொண்டு சேர்க்க பீமன் தேர்வு செய்யும் குரங்கு ,அது பீமன் செய்யும் குசும்பின் உச்சம். அந்த குரங்கு நுகர்ந்து விட்டு குமட்டுகிறது. அது ஒருபோதும் தேறலை அருந்தாது. நிச்சயம் அது தேறலை பீமன் கட்டளைப்படி தர்மன் வசம் சேர்த்து விடும். 

அதே போல் மொத்த குரங்கு கூட்டமும் அந்த கூட்டத்தின் தட்டான் பூஸ் அடித்து மப்பான பிறகே தேறலில் கிடந்தது திளைக்கிறது. 

குரங்குகளும் சாய்ந்த நிலையில்தான் ஜயத்ரதன் வருகை யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.

கடலூர் சீனு