Friday, February 10, 2017

வெண்முரசு விக்கிப்பக்கம்



அன்பு ஜெமோ சார்,
               
                   எனக்கு முதலில்  கோபம் வந்தது. உண்மையைச் சொல்வதென்றால் வெண்முரசு பக்கம் நீக்க செய்த முயற்சி வருத்தம் தருவதாகவே உள்ளது. ஆனால்  இதனாலெல்லாம் அதன் நிறை துளியும் குறையப் போவதில்லை.
                 இழப்பவர்கள்  இரக்கப் பட வேண்டியவர்கள். வெண்முரசை வேண்டுமென்றே படிக்காதவர்களுக்கு  வெண்முரசு என்றால் என்னவென்று தெரியப்போவதில்லை. உன்னதம் ஒன்றை இழப்பவர்களே.  தங்களின் திறனை ஏற்றுக் கொண்டால் அவர்களின் திறனின்மையை ஒத்துக்கொண்டதாய் நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது. உங்கள் உயரத்திற்கு நீங்கள் மடங்கியெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. வெண்முரசில் இல்லாததென்று ஒன்றுமில்லை. எனவே  வெண்முரசினூடாகவே பதில் சொன்னால் போதுமானது. நாங்கள் வாசகர்கள் பெற்றுக்கொள்கிறோம்.
                    
இரா.சிவமீனாட்சிசெல்லையா.