Thursday, February 16, 2017

பெண்ணாதல்





ஜெ

வெண்முரசில் ஆண் பெண்ணாவது பல வகைகளில் வந்துகொண்டிருக்கிறது. ஆண் பெண்ணாகி அன்னையாவது மாந்தாதாவின் கதை. அர்ஜுனன் பெண்ணாகும் இடம் கிராதத்தில் உச்சகட்டமான ஒரு புனைவு. இளையின் கதை அவற்றிலிருந்து வேறுபட்டிருக்கிறது. அவள் ஆணாகவும் பெண்ணாகவும் காமத்திலாடுகிறாள். கருவுற்று பிள்ளை பெறுகிறான். இது ஆச்சரியமானது. இந்த வகையான நுட்பமான உருவாகங்கள் எல்லாம் நம் புராணங்களிலேயே இருக்கின்றன எனபதை நினைக்க ஆச்சரியமாகவே இருக்கிறது

மகாதேவன்