Thursday, February 23, 2017

மகத்தானவை



ஜெ
நெடுங்காலத்திற்குப்பின் வெண்முரசு வாசிப்பத்ற்கு மிகவேகமாகச் செல்கிறது. அடுத்தது என்ன என்ற ஆவலைத்தூண்டும் வகையாக உள்ளது. மகாபாரதக்கதை அறிந்ததுதான். ஆனால் புரூரவஸ் கதைக்கு நீங்கள் அளிக்கும் திருப்பங்க்ளும் வளர்ச்சிகளும் அபாரமானவை. அவை வெண்முரசைன் கொடை என்ற் சொல்ல்லாம். இன்று வந்துகொண்டிருக்கும் பகுதிகள் வெண்முரசின் உணர்ச்சிகரமான பகுதிகள்.

புரூரவஸ் தேவமங்கையை மணந்தான் துன்புற்றான் என்பது கதை. அது இன்பத்தின் உச்சியும் துன்பத்தின் உச்சியுமாக ஒரே சமயம் இருக்கும் ஒரு நிலை என வாசித்தபோது தோன்றியது. ஒரு சாமானிய மனிதன் இந்த உச்சநிலைகளுக்கெல்லாம் சென்று மீள்வது மிகமிகக்கடினமானது. ஆனால் ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய உறவும் பிரிவும் அமைகிறது. மகத்தான உறவுகள் மகத்தான பிரிவுக்ளாகத்தான் முடியும் என்றும் நினைக்கத்தோன்றுகிறது

சந்திரகுமார்