Saturday, February 4, 2017

திரெளபதி



திரெளபதியைத்தான் இன்றுமுழுக்க நினைத்துக்கொண்டே இருந்தேன். வனத்திற்குள் வந்த அன்று தங்குமிடம் குறித்து திகைத்து உறக்கமின்றி தவித்தவள் இன்று புல்லரிசி களைந்து அடுப்பிலிடுவதும், சுக்கிட்டு பாலைகாய்ச்சுவதுமாக சாதராண இல்லத்துணைவியாக மாறிவிட்டாள். இன்னும் காலைத்தேய்த்து வருவதை அறிவிப்பதும், துயருருவதும் சலிப்பதும், எண்ணி எண்ணி ஏங்குவதுமாய் காட்டில் நிலையின்றி கலங்குவது பெரியவர்தான். படித்ததை சொல்கையில் மட்டுமே மகிழ்கிறார். இவர் மட்டுமே இங்கும் அங்கும் எங்கும் துயரிலேயே இருக்கிறார்\

லோகமாதேவி