Sunday, May 14, 2017

காமத்தேடலின் வளர்ச்சி





அன்புள்ள ஜெ

மாமலரை இன்று வாசிக்கும்போது கதைகளில் முழுக்க காமத்தேடலின் வளர்ச்சிதான் தெரிகிறது எனத் தோன்றுகிறது. சந்திரனுக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. அவன் தாரையை தன் ஆசிரியரிடமிருந்து திருடிச்செல்கிறான். ஆனால் புதன் அந்தப்பொறுப்பின் குற்றவுணர்ச்சியை அடைகிறான். அதன்பின் புரூரவஸ் அந்தக்குற்றவுணர்ச்சியும் காமவிருப்பமும் இருபக்கமும் இருக்க கொண்டாடுகிறான். ஆயுஷுக்கு குற்றவுணர்ச்சி மட்டும்தான். நகுஷன் மீண்டும் குற்றவுணர்ச்சியும் பாலியல் வேட்கையும் கொண்டிருக்கிறான். மறுபடி யயாதி. அவன் தான் கிளைமாக்ஸ். அவன் உச்சத்தை அடைந்து ஒருவழியாக மீட்பு கொள்கிறான். அந்த மீட்புதான் புரூ. இந்த கிராஃப் நாவலை ஒரு பெரியகதையாக வாசிக்கவைக்கிறது

மகாதேவன்