Thursday, May 4, 2017

முரண்பாட்டமைதி






ஜெ
நறுமணம் தேடிவந்தவன் நாற்றத்தையும் அறிந்தபின்னரே அதை அடையமுடிகிறது என்ற டிவிஸ்டில் இருக்கிறது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கிளாஸிஸத்தின் அமைப்பு. இது விஷ்ணுபுரத்திலும் இந்த முரண்பாட்டமைதி இருந்தது என்றாலும் இவ்வளவு பெரிதாக எழுதும்போதுதான் இதைத்தெளிவாகப்பார்க்கமுடிகிறது.

நாற்றங்களை நுட்பமாக அறிவது தன்னை அறிவதுதான். ஒவ்வொருவரும் அந்தரங்கமாக நினைத்திருப்பது ஒருநாற்றத்தையே என்ற வரி அருவருப்பூட்டுவதும் அதேசமயம் ஒரு பெரிய திறப்பாக அமைவதும் ஆகும். நறுமணத்தையல்ல நாற்றத்தையே மனிதர்கள் உள்ளூர விரும்புகிறார்கள் என்ற வரியை நினைக்க நினைக்க ஆச்சரியம் பெருகிக்கொண்டே இருக்கிறது

செந்தில்குமார்