Tuesday, May 9, 2017

கதை நுட்பம்





அன்புள்ள ஜெ

முண்டனாக அனுமன் வந்தது ஒரு பெரிய கதை நுட்பம். எப்படியானாலும் அனுமன்தான் கதையின் நாயகன். ஆனால் அவன் ரெண்டு அத்தியாயங்களுக்குமேல் வர முடியாது. ஆனால் இந்நாவலில் கதை முழுக்க வந்துகொண்டே இருக்கிறார். வாசித்து முடிக்கும்போது மொத்தநாவலும் அனுமனின் கதையாக ஆகிவிடுகிறது. அந்த சூட்சுமம் தான் நாவலை ஓர் அரிய அனுபவமாக ஆக்குகிறது என நினைக்கிறேன். அனுமனாகவருவதும் சரி அன்னையாக வருவதும் சரி குரங்குகள் என்பதே நாவலின் மையமான விஷயம்

சிவக்குமார்