Wednesday, June 28, 2017

அடுமனைக்கூட நிகழ்வுகள்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய வெண்முரசில் -நீர்க்கோலம்’ – 34- அடுமனைக்கூட நிகழ்வுகள்  எவரும்  எதிர்பார்க்க முடியாத திருப்பமாக உள்ளது.வழக்கமாக 'பந்தி சண்டை'தான்,சாமான்ய உறவுகளின் நிரந்தர பிரிவுக்கு முதற் சுழி போடுவது.இருந்தபோதிலும் இது எளிதில் யாராலுமே ஏற்க இயலாதது.அதுவும் நளனால் ஒருபோதும் தாங்கி கொள்ள முடியாது .அதனால்தான்  அன்னத்தை  பழிப்பது அன்னையை பழிப்பதைவிட மேல் என உணர்ந்து  இக் கொடும் தண்டனையை உடன் அளித்தான்.''நள பாகத்தின்"மற்றொரு சுவையை அனைவரும் அறிய நேர்ந்தது.உங்களின் கற்பனைத்திறன் எனும்
 
 "நள பாகத்திற்கும்"   ஈடு இணையில்லை!.

அன்புடன்,

அ .சேஷகிரி .