Sunday, July 16, 2017

நீரில் மீனெழுவது



"அவள் அவனை நீரில் மீனெழுவதுபோன்ற விழியசைவால் நோக்கிவிட்டு"

ஜெ, இது போன்ற பார்வையை பார்க்க நேர்ந்தவர்களுக்கே இந்த உவமை சட்டென்று பிடிக்கும் என்று நினைக்கிறேன்! வெண்முரசு abstract நினைவுகளுக்கு சொற்களை அளிக்கிறது!

வெண்முரசில் வரும் உருவகங்களில் நீரில் மீன் எழுவது என்பது எண்ணம் சொல் என்பவையோடு தொடர்புள்ளது. இங்கு புறவயமாக சுபாஷிணியின் குறுகுறுப்பையும் நாணத்தையும் அழகாக காட்டினாலும் முக்தன் பார்வையில் சற்றே அவள் slowness-யும் காட்டுகிறது.

நீரில் மீனெழும் வேறொரு காட்சியும் நினைவுக்கு வந்தது: குருஷேத்திரத்திற்கு  பின் பல ஆண்டுகள் தன் சொற்களை இழந்து  அலைந்து திரியும் வியாசர் பின் யமுனையில் எழுந்து விழும் மீனை பார்த்து தன் முதல் எண்ணத்தை மீண்டும் அடைகிறார்.
 
 வமதுசூதனன் சம்பத்