Monday, July 31, 2017

தரிசனம்





ஜெ

என் அடுத்த கேள்விக்கும் ஒருவிதமாக பதில் சொல்லிவிட்டிர்கள் ஜெ !! [அரவுக்காடு]



அதாவது இந்த ஒருமை என்பது இயல்பாக உள்ளதை நீங்கள் கண்டுபிடித்து வெளிக்கொணர்கிறீர்களா அல்லது  நீங்கள் முற்றிலும் புதிதாக உருவாக்குவதா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாகம் என்று மட்டுமல்ல, பல பாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் உள்ள தொடர்புகள்...வேறு எப்படித்தான் இருக்கமுடியும் என்று யோசிக்கவைக்கின்றன...

ஆனால் அப்படி நினைத்தால் உங்கள் பங்கு என்ன என்று அடுத்து கேட்க தோன்றுகிறது !!
மதுசூதன் சம்பந்த்

அன்புள்ள மது

இந்த ஒருமை வியாசரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதாவது textuality அல்ல. அப்படி இருந்தால் அதில் எனக்குப் பங்கில்லை. கண்டடைதலின் பங்கே உள்ளது. இது வரலாற்றில் உள்ளியக்கம்.அதாவது historicity . வியாசன் அதை அறிந்ததில்லை. ஏனென்றால் பலகாலமாக பின்னர் சேர்க்கப்பட்ட கதைகளின் தொகுதி இன்றைய மகாபாரதம். இந்த வரலாற்றோட்டத்தை நான் கண்டடைவது என் சொந்த தரிசனம்

ஜெ