Wednesday, July 12, 2017

சம்பவன்






அன்புள்ள ஜெ

சம்பவன் ஒரே கணத்தில் மாஸ்டர் ஆகிறான். அந்தத்திருப்புமுனைக்கணத்தை எத்தனை வாசித்தாலும் தீரவில்லை. அதுவரை கற்ற அனைத்தும் மறந்துவிடுகிறது. குருவின் கால்கள் மட்டுமே எஞ்சுகின்றன. அவை அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. கண் திறந்தால் மாருதர் வந்து நிற்கிறார்கள். அவர்களுடன் பேசமுடிகிறது. சமையல் கைவருகிரது. அவனுக்கான தெய்வம் எழுந்துவிட்டது.

விராடபுரிக்குள் அவன் நுழைந்து ஆசிரியனைக் கண்டடைந்து தேறுவது வரையிலான கதை தனித்தனியாகச் சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு பெரிய இதிகாசத்தனமை கொண்டிருக்கிறது

சாரங்கன்