Monday, July 17, 2017

சுபாஷிணி






அன்புள்ள ஜெ

சுபாஷிணி மிக எளிமையான சேடிப்பெண்ணாக வருகிறாள். ஆனால் அவள் ஆசைப்படுவது பாஞ்சாலியாக ஆவதற்காக. அவள் படியிறங்கி விளையாடும்போது மனசுக்குள் பாஞ்சாலியாக ஆகிவிட்டிருக்கிறாள். பாஞ்சாலியாக அவள் அக்கனவுக்காட்டுக்குள் வருகிறாள். அந்த உருமாற்றம் அற்புதமானது. அவள் ஒரு தங்கப்பாம்பாக ஆகிவிடுகிறாள்

அதில் அவளுக்கு 3 கணவர்கள். முதல்வன் முக்தன். அவன் அர்ஜுனன். அவனுக்குள் பெண் இருக்கிறாள். இரண்டாவது நகுலசகதேவர்கள். அவர்கள் அவள் குழந்தைகள். அவள் ஏற்றுக்கொண்டு மேலே செல்வது பீமன். அதாவது சம்பவன். தர்மன் அவள் கணக்கிலேயே இல்லை. சரியா? நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா?

மகேஷ்