Monday, July 31, 2017

இளம்வாசகர்கள்





அன்புள்ள ஜெ

கோவைப் புத்தகக் கண்காட்சியில் நான் பார்த்த ஆச்சரியங்களில் ஒன்று மிக இளம் வயதுள்ள வாசகர்கள் பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள் என்பது. நாலைந்த்பேர் நீர்க்கோலம் வரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு மிக வெட்கமாக ஆகிவிட்டது. நானெல்லாம் ாண்டீபத்தை இன்னும் தாண்டவில்லை. ஒருவேளை நான் அச்சில் வாசிப்பதனால்தான் இப்படியா என்று தெரியவில்லை. இணையத்தில் அடுத்த தலைமுறையினர் வேகமாக வாசிக்கிறார்களா?

சத்யமூர்த்தி

அன்புள்ள சத்யமூர்த்தி

அப்படி பொதுமைப்படுத்திக் குறைத்துக்கொள்ளவே முடியாது. என் மகள் சைதன்யா, வெண்பா கீதாயன் இருவருக்கும் ஒரே வயது. இருவருமே அச்சில்தான் நாவலை வாசிக்கிறார்கள். தொடர்ந்து… சைதன்யா ஆங்கில இலக்கியம் வெண்பா தமிழிலக்கியம் படிக்கிறார்கள். சைதன்யாவின் நான்கு வகுப்புத் தோழிகள் வெண்முரசை நூலாகவே வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

ஜெ