Thursday, August 3, 2017

கார்க்கோடகன் என்னும் உருவகம்






ஜெ
கார்க்கோடகன் என்னும் உருவகம் விரிவாகிக்கொண்டே போகிறது. உலகாசை போகவெறி ஆகியவற்றின் அடையாளமாகவே நாகம் விரிந்துவருகிறது. தமயந்தியிடம் அது கேட்கும் கேள்விகள் கிட்டத்தட்ட சாத்தான் கேட்கும் கேள்விகள். எது மகிழ்ச்சி என்று தெரிந்தபின் ஏன் மனிதர்கள் அஞ்சுகிறார்கள்? ஏனென்றால் அவர்கள் தர்மத்தை எண்ணுகிறார்கள். அது வேண்டாம் என்றும் ஆழ்மனதிலுள்ள கொண்டாட்டமே போதும் என்றுதானே கார்க்கோடகன் சொல்கிறான்?

ராம்குமார்