Thursday, August 17, 2017

கர்ணன்





 வெகு நாட்களுக்குப் பிறகு கர்ணனைக்குறித்த செய்தி இன்று. குடியால் உடலும்  உளச்சான்றெனும் நோயினால் உள்ளமும் நலிந்தவனாய்  வில்லெடுக்கவே கைகள் நடுங்குபவனாக அறியப்பட்டாலும்  நெடுநாட்களுக்குபின்னர் அவரைக்குறித்து வெண்முரசில் வாசித்ததில் மகிழ்ச்சி, விதுரரையும் கர்ணனையும் விரும்பாத பெண்கள் இல்லையென்றே எண்ணுகிறேன்.

 ஆபருக்கு ஐவரையும்  முற்றிலுமாக  அடையாளம் தெரிந்து விட்டதா? வாசிக்கையில் சந்தேகமாக இருந்தது அஸ்தினாபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் கூட தருமர் இத்தனை தெளிவாக படைசூழ்கை  படை நகர்வுகள் பற்றியெல்லாம்  பேசியதில்லை  நூல் பயின்றுகொண்டு மட்டுமே இருந்தார் எதையும் இத்தனை சிறப்பாக கணித்ததில்லை இன்று போல குங்கனாயிருக்கையில் தெளிவாக இருக்கிறார்,

லோகமாதேவி