Friday, August 4, 2017

மகாபாரதத்தின் ஒரு வடிவம்





அன்புள்ள ஜெ

நளனின் கதை மகாபாரதத்தின் ஒரு வடிவம் தான் என்பதை இப்போது நீங்கள் இரண்டுகதைகளையும் இணைக்கும்போது அற்புதமாகப்புரிகிறது. ஆனால் இது ஏன் புரியாமலிருந்தது. ஏன் இதுவரை யாருமே இதைச்சொல்லவில்லை? ஆச்சரியம்தான். சூதாடுதல் காடுசேர்தல் எல்லாமே அதில் உள்ளது

அதேபோல விரடபர்வமும் மகாபாரதத்தின் ஒரு வடிவம். அதிலும் அதே சூதாட்டம் சபைநிகழ்ச்சிகள் எல்லாமே உள்ளன. கிட்டத்தட்ட துகிலுரிதல். இரண்டுகதைகளையும் நீங்கள் இணைத்த்போது ஏன் இது என்ற குழப்பம் இருந்தது. இப்போது இரண்டும் அற்புதமகாப்பின்னிச்செல்வதைக் காணும்போது ஆச்சரியமாக உள்ளது

மனோகரன்