Sunday, September 10, 2017

மாற்றங்கள்




அன்பு ஜெமோ

வெண்முரசு அடுத்த நாவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திரைப்பட மற்றும் பிற நூல்களில் உள்ள சித்தரிப்பில் இருந்து வெண்முரசு நிகழ்வுகள் பெரும்பாலும் வித்தியாசமாக இருப்பதை காண்கிறேன். (உம். விராடப்போரில் பீஷ்மர் பங்கு கொண்டதான சித்தரிப்பு). இது படைப்பாளியின் சுதந்திரம் சார்ந்ததா. எது மூலம். மாற்றுவதற்கான எல்லை எது. இது பற்றி தங்கள் கருத்து அறிய ஆவல்.

கண்ணனை ருத்ர நிலையில் கிராதத்தில் பார்த்தோம்.

அதன் பின் கண்ணன் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு மாறுவது குறித்த நிகழ்வோ குறிப்போ வரவில்லை.

அடுத்த பதிவுகளில் இது பற்றி எதிர் பார்க்கலாமா.

அன்புடன் 

ரமேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ்

மகாபாரதம் பலமுறை பிற்சேர்க்கைகள் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆகவே அதை ஒற்றைக்கதையாக ஆக்க அதன் நிகழ்வுகளை மாற்றியாகவேண்டும். மேலும் இந்நாவல்தொடர் முற்றிலும் புதிய ஒரு மையத்துடன் மறுமுறை சொல்லப்படுக்திறது அதன்பொருட்டும் மாற்றங்கள்

விராடபர்வம் அர்ஜுனன் பெருமைக்காக பின்னர் சேர்க்கப்பட்டது. பீஷ்மர் துரோணர் உட்பட அத்தனைபேரையும் அர்ஜுனன் தனியாகச்சென்று போரில் வென்றதாக அது சொல்கிறது. அப்படி எழுதினால் அடுத்துவரும் பெரும்போரில் அவர்களை அவன் சூதிலும் சூழ்ச்சியிலும் வெல்வதாக எழுதமுடியுமா?

ஜெ