Thursday, September 21, 2017

இனியவை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வெண்முரசின் நாட்கள் இனியவை.  சீனு அந்த பக்கம் இருந்து வலது கை நீட்டி அபிமன்யுவின் தோளில் போட்ட அதே சமயம் நான் இந்த பக்கம் இருந்து அவனது தோளில் கை போட்டேன்.  இப்படி அபிமன்யுவிடம் தோழமை பெருகுகையில் ஒரு சகோதரி அவனுக்கு காதல் கடிதம் வேறு போட்டு விட்டார்.  எடுத்த எடுப்பிலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒருவன் ஆகி விட்டான்.  தொலைக்காட்சி மகாபாரதத்தில் அரைகுறையாக கண்டு அவனது பரிதாபத்துக்குரிய சாவு மட்டுமே அறிந்திருந்தேன்.  துரியோதனனின் நல்லாட்சி பற்றி கூறி நியாயம் செய்தது போலவே, அபிமன்யுவின் மறைவிற்கு என்பதை விட அவனது துடிப்பான வாழ்விற்கு மையம் தருகிறீர்கள்.  மரணத்தினால் அல்லாமல் வாழ்வினால் அவன் நினைவு கூறத்தக்கவன் என்று.  எப்படியும் அது எல்லோருக்கும் வரும், சீரியசாக யோசித்து இப்போதே கவலைப்பட விரும்பவில்லை.  உவகையின் தருணங்கள் நிரந்தரம் நிலைப்பவை.


அன்புடன் 
விக்ரம்
கோவை