Wednesday, November 22, 2017

திட்டங்கள்



ஜெ

யௌதேயன் போடும் திட்டங்கள் மிகக்கூர்மையானவை. ஆனால் அவை அனைத்தும் பலராமரும் துரியோதனரும் கொள்ளும் பெருந்தன்மையால் முழுமையாகவே அழிக்கப்படுகின்றன. அதேபோல அபிமன்யூ போடும் திட்டங்கள் மிகச் சிறப்பானவை. அவை யாதவர்களின் சிறுமையால் வெல்லப்படுகின்றன. அதேபோல சுருதகீர்த்தி பேசுபவையும் சிறப்பானவை. அவை அந்தத்தருணத்தின் இணைப்பால் வெல்லப்படுகின்றன. மனிதனின் பெருந்தன்மை சிறுமை தர்செயல் மூன்றுமே மனிதனின் தந்திரங்கள் கணக்குகளை விட மிகவும் விரிவானவை என்று தெரிகிறது


ராதாகிருஷ்ணன் எஸ்